நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,"பூமியிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானவை, மஸ்ஜித் ஆகும், அதே போல், அல்லாஹ் மிகவும் வெறுக்கும் இடங்கள், பூமியின் கடைத்தெருக்களாகும்"‍‍


அறிவிப்பாளர் - அபூ ஹூரைரா (ரலி) - ஆதாரம்: சஹீஹ் முஸ்லிம் - புத்தகம் 4 - எண் 1416

Wednesday, August 4, 2010

எங்கள் கோரிக்கை

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் அமைந்துள்ள காந்தி மாநகர், கணபதி மாநகர், தென்றல் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பல குடும்பங்கள் இங்கு வீட்டு மனை வாங்கியுள்ளனர். இதனால் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் அதிகமான குடும்பங்கள் இங்கு குடியேற வாய்ப்பு உள்ளது. ஆகையால் இஸ்லாத்தின் முக்கிய கடமையான தொழுகையை நிலைநாட்டவும் வருங்கால சந்ததிகளின் நலன் நாடியும் இங்கு ஒரு இறை இல்லத்தை கட்டுவதற்கு அனைத்து குடும்பத்தினரும் ஒரு மனதாக முடிவு செய்து சுமார் 12 லட்ச ரூபாயில் 4.5 சென்ட் இடம் வாங்கி அதில் செட் அமைத்து ஐந்து நேர தொழுகை இமாம் ஜமாஅத்தாக நடை பெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மேற்படி அமைக்கப்பட்டுள்ள செட்டில் மழை நேரங்களில் தண்ணீர் ஒழுக்கு ஏற்பட்டு தொழுகைக்கு இடையூறாக உள்ளது. மேலும் பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்து வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.

இப்பகுதியில் வாழும் நமது சமுதாய மக்களில் பெரும்பான்மையினர் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட குடும்பத்தினர் மட்டும் சேர்ந்து பள்ளிவாசல் கட்டுவது இயலாது என்பதால் அல்லாஹ் நமது சமுதாயத்திற்கு பொறுப்பாளர்களாக ஆக்கியுள்ள தங்களின் மேலான உதவி மற்றும் வழிகாட்டுதலை நாடி வந்துள்ளோம்.

இந்த வலைப்பூவின் மூலமாக, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு இணங்க (இன்ஷா அல்லாஹ்), தங்களின் உதவியை நாடுவது, து'ஆ மூலமும், மனமுவந்து அளிக்கும் சதகா மற்றும் ஜகாத் மூலமும் இன்னும் பிற ஹலாலான வழிகளிலும் இறையில்லத்தை மேம்பட செய்யுங்கள் என்பதே. தங்களின் மேலான உதவிக்கு எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் மகத்தான நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன். ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்.

வஸ்ஸலாம்.

தங்களின் ஆதரவை நாடி,
முஹல்லாவாசிகளின் சார்பாக: மஸ்ஜித் மாமூர்.

No comments:

Post a Comment